Friday, October 30, 2020

YOUTUBE -ல் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி ?


       நாம் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒவ்வொரு தளங்களிலும் அதற்கான வசதியை  அந்த தளம் அமைத்து கொடுக்கும் . ஆனால் YOUTUBE தளத்தில் அந்த வசதியை நாம் காண இயலாது .
அப்படி நாம் அதில் தரவிறக்கம் செய்யதாலும் அந்த தளத்தின் உள்ளே சென்றால் மட்டுமே அதை நாம் காணமுடியும் . நாம் YOUTUBE வீடியோக்களை எளிதாக தரவிக்கம் செய்யும் முறையை காண்போம் .

பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

1. முதலில்  குரோம் ,மோசில்லா , UC பிரௌசர் இவற்றின்மூலம் YOUTUBE தளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.

2. பிறகு நாம் தேட வேண்டிய வீடியோக்களை உள்ளீடு செய்து பெற வேண்டும்.

3. ADDRESSBAR -ல்   http://www என்பதை அழித்துவிட்டு youtube என்பதற்க்கு முன்பாக ss  எனபதை உள்ளீடவும் . பிறகு enter key -யை அழுத்தவும் .

4. அதன் பிறகு online video downloader என்ற  விண்டோ திறக்கும் அதில் நீங்கள் எந்த வடிவில் (avi ,mp4,mp3) தரவிறக்க உள்ளீர்கள் என்ற விவரத்தினை பதிவு  செய்து Download என்பதை  click  செய்தால் வீடியோ தரவிறக்கப்படும்.

மேலும் சந்தேகங்களுக்கு கீளேயுள்ள படங்களை பார்த்து அறிந்து கொள்ளவும்.


                                                                                                                                                             



    *உங்களின் சந்தேகங்களை commant -ல் உள்ளிடவும்.* 

SAI செயலி.



நம் அன்றாட வாழ்க்கையில் செய்திகளை பரிமாறிக்கொள்ள பலவகையான செயலி  பல நிறுவனங்கள் வெளியீட்டுள்ளார்கள். அவற்றில் பலவிதமான வசதிகளையும் கொடுத்துள்ளார்கள் வீடியோ கால், ஆடியோ கால்,புகைப்படம் பகிர்தல்,இன்னும் பற்பல வசதிகளை கொண்டுள்ளது.

 இந்த வகையில் WHATSAPP,TELEGRAM  ஆகியவற்றிற்கு மாற்றாக "SAI -(SECURE APPLICATION FOR INTERNET )" என்ற ஒரு செயலி  நம்முடைய இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளனர்.

இந்த  செயலி விரைவில் உபயோகத்திற்கு வரும் என பாதுகாப்பு அமைச்சகம்  தகவல்.

Wednesday, October 28, 2020

தங்களுடைய மொபைல் எண்ணை தெறிந்துகொள்ள!.




தங்கள் கைகளில் இருக்கின்ற மொபைல் போனின் எண்  என்னவென்று சில நபர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் "தெரியவில்லை". அப்படிபட்டவர்களுக்காகவே இந்த பதிவு.


எப்படி மொபைல் எண்ணை  தெரிந்து கொள்வது என்று கீழே பார்ப்போம் .அனைத்து நெட்வொர்க்கிலும் தெரிந்து கொள்ளலாம் 


IDEA -*1#
BSNL – *888#
AIRCEL – *131#
VIDEOCON – *1#
AIRTEL – *121*9#
RELIANCE – *1#
VIRGIN – *1#
VODAFONE – *131*0#
TATA DOCOMO – *580#

மேலே கொடுக்கப்பட்ட  எண்களை பயன்படுத்தி தங்கள் நெட்வொர்க் எண்னை தெரிந்து கொள்ளுங்கள் .


நன்றி !!!! அடுத்த பதிவில் மற்றொரு பயனுள்ள தகவலுடன் சந்திப்போம் .

 

Saturday, October 24, 2020

whatsapp -இல் BOLD மற்றும் ITALIC, STRIKE THROUGH உபயோகிக்கும் முறை




நம் அன்றாட வாழ்வில் whatsapp  பயன்படுத்தாத பயனர்களை நாம் காண்பது அரிது, அந்த அளவிற்கு whatsapp-ன் பயன்பாடு பட்டி தொட்டி எங்கும் இருக்கின்ற பயனர்களை சென்று அடைந்து விட்டது . குறுந்செய்தி , புகைப்படம் ,காணொளி ,ஒலி போன்றவற்றை மற்றவருடன் நாம் பகிர்ந்து கொள்கிறோம் .

அது மட்டும் அல்லாமல்  முந்தய கால கட்டத்தில் ஒருவரிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள கடிதம் மற்றும் தொலைபேசியை தான் நாடி இருந்தோம், அதன் பிறகு செல்லிடப்பேசியை நாடி இருந்தார்கள் இருந்தும் புகைப்படம் மற்றும் பிறவற்றை நாம் பகிர்ந்து கொள்வதில் கொஞ்சம் சிரமங்கள் இருந்தன நாளைடைவில் அந்த சிரமங்களை போக்கும் விதமாக whatsapp என்ற செயலி நம் அனைவருக்கும் ஒரு வர பிரசாதமாக அமைந்தது .

இதன் மூலம் ஒரு செய்தியையோ அல்லது காணொளியையோ எளிதில் மிக விரைவில் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது, இது பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமே!.

இப்பேற்பட்ட whatsapp -ல் சில வசதிகளை அந்த நிறுவனம் பயனாளிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.அவற்றை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகின்றோம்.

ஒருவருக்கு ஒரு குறுந்செய்தியை அனும்பும்போது சில செய்திகள் முக்கியமானதாக இருக்கும் அவற்றை பிரித்து காட்டுவதற்காக இந்த வசதியை அறிமுகபடித்தியுள்ளது .

BOLD - செய்திகளை தடிமனாக காட்ட பயன்படுகிறது .இதை whatsapp -இல் பெற நாம் எழுதும் செய்திகளுக்கு முன்பு  மற்றும் பின்பு * இந்த அடையாளத்தை பயன்படுத்தவும் .

EX :  *  welcome  to computer uzhagam * 

 result -- welcome  to computer uzhagam

ITALIC - இது  எழுத்துக்களை சற்று சாய்வானதாக காட்ட பயன்படுகிறது. இதை பெற நாம் எழுதும் செய்திகளுக்கு முன்பு  மற்றும் பின்பு - இந்த அடையாளத்தை பயன்படுத்தவும் .

EX :  -welcome  to computer uzhagam-

 result -- welcome  to computer uzhagam


STRIKE THROUGH- - இது எழுத்துக்களை சற்று மாறுபட்டு இடைகோடிட்டு  காட்ட பயன்படுகிறது. இதை பெற நாம் எழுதும் செய்திகளுக்கு முன்பு  மற்றும் பின்பு இந்த அடையாளத்தை பயன்படுத்தவும் .

EX :  ~welcome  to computer uzhagam~  

 result -- welcome  to computer uzhagam


*நன்றி நண்பர்களே மீண்டும் இது போன்ற தகவல்களை அடுத்த பதிவுகளில் காண்போம். *

குறிப்பு : உங்களது கனிவான கருத்துக்கள்  வரவேற்க்கப்படுகிறது.



Friday, October 23, 2020

கணினி வரலாறு.


இன்றைய காலகட்டத்தில் மனிதன் ஒரு மணி நேரம் செய்யகூடிய வேலைகளை ஒரு மணி துளி நேரத்தில் செய்து நமது நேரத்தை மிச்சம் செய்து கொடுப்பதில் இந்த கணினிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த கணினி உருவான வரலாற்றை பற்றி விரிவாக கீழே காண்போம்.

ஆரம்பத்தில் மனிதன் கூட்டல் ,கழித்தல் வேலைகளை செய்வதற்காக தனது விரல்களை பயன்படுத்தினான். கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் எண்சட்டதை ( ABACUS) கண்டுபிடித்தான் . இதுவே முதலாவது கணினியாகும். இவ்வாறான எண்சட்டங்கள் பல்லாயிரக்கணக்கான நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1617ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த JOHN NAPIER என்பவரால் மடக்கை கோட்பாடு (LOGARITHMS) உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மடக்கை பெறுமானங்கள் கொண்ட சட்டகங்கள் அமைக்கப்பட்டு அதனோடு கணித்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டகங்கள் நேப்பியரின் சட்டகங்கள்(NAPIER'S BONES) என அழைக்கப்பட்டன.

1642ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் கணிதவியலாளரான பிளைஸ் பாஸ்கால்( BLAISE PASCAL) என்பவரால் கூட்டற்பொறி கண்டுபிடிக்கப்பட்டது .இவ்வுபகரணம் பாஷ்காலின் என அழை
க்கப்பட்டது.

1674ஆம் ஆண்டில் இவ்வுபகரணம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த கணிதவியலாளரான கோட்பிரட் வில்லியம் என்பவரால் மேம்படுத்தப்பட்டது.கூட்டல் ,கழித்தல் இத்துடன் பெருக்களும் சேர்க்கப்பட்டது.

1822-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கணிதவியாலாளரான சார்லஸ் பாப்பேஜ் என்பவரால் பொறிமுறை கணித்தலுக்கு உருமாதிரி அமைக்கப்பட்டது. இதை வித்தியாச பொறி (Different Engine) என அழைக்கப்பட்டது.

1833-ம் ஆண்டு பகுப்பு பொறி(Analytical Engine)உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள கணினி கட்டமைப்புக்கு இதுவே அடித்தளமாக இருந்தது.காலத்திற்கு ஏற்ப அதன் வளர்ச்சியும் மாறிக்கொண்டே இருந்தன. தற்கால கட்டத்தில் கணினி அபார வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு இருக்கிறது.

கணினி வந்த பிறகு மனிதனுடைய பல பணி சுமைகளை சில மணி துளிகளில் தீர்த்து வைத்தது. தற்போது அனைத்து துறைகளிலும் கணினி இல்லாமல் நாம் காண முடியாது அப்படி ஒரு வளர்ச்சி அடைந்துள்ளது இந்த கணினி.

வரும் காலங்களில் கணினியின் வளர்ச்சியை நாம் யூகிக்க கூட முடியவில்லை அப்படி ஒரு வளர்ச்சியை அடையும் என்பதே நாம் அனைவரின் எதிர்பார்ப்பு.

ஆட்ண்ட்ராய்டு ஒரு சிறிய பார்வை !

 

ஆண்ட்ராய்டு என்றால் என்ன? தற்போது இந்த கேள்வியை யாரிடமாவது நாம் போய் கேட்டால் நம்மை அடிக்க வந்துவிடுவார்கள், ஆம் அப்படி ஒரு நிலைமையை உருவாக்கி வைத்திருக்கிறது சிறுவர்கள் முதல் முதியவர்களின் கைகளில் இந்த ஆண்ட்ராய்டு. சரி அப்படி என்ன தான் இந்த ஆண்ட்ராய்டு-னு கொஞ்சம் பாப்போம் .

   ஆண்ட்ராய்டு என்பது ஒரு இயங்கு தளம் கணினியில் நாம் பயன்படுத்தும்  விண்டோஸ் இயங்குதளத்தை போன்றது இந்த ஆண்ட்ராய்டு , லினக்ஸ் கெர்னலில் இயங்கக்கூடிய செல்லிடப்பேசிக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இயங்குதளம். முதலில் இது ஆண்ட்ராய்டு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது, பிறகு இந்த நிறுவனத்தை கூகுள் நிறுவனம் இதை வாங்கியது . 5 நவம்பர் 2007 அன்று ஆண்ட்ராய்டு வெளியிடப்பட்டது , 21 அக்டோபர் 2008 முதல் ஒரு திறந்த  மூலமாக ஆண்ட்ராய்டு கிடைக்கக்கூடியதாக இருந்தது .
    
 30 ஏப்ரல் 2009 அன்று அண்ட்ராய்டுக்கான அதிகாரப்பூர்வ 1.5 (கப்கேக்) புதுப்பித்தல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 15 செப்டம்பர் 2009 அன்று 1.6 (டோனட்) SDK வெளியிடப்பட்டது. அதையும் மேம்படுத்தப்பட்டு 26 அக்டோபர் 2009 அன்று 2.0 (எக்லேர்) SDK வெளியிடப்பட்டது. இப்பதிப்பில் வன்பொருள் வேகம் மேம்படுத்தப்பட்டது . அதன்  பிறகு 2011 -ல் பிரோயோ அடுத்து அதே 2011-ல் ஜிஞ்சர் பிரட் என்ற பதிப்பையும் வெளியிட்டது. 

     அதன் பிறகு அடுத்தடுத்து வரிசையாக  ஹனி கோம்ப் , ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச்,ஜெல்லி பீன்,கிட் காட் ,லாலிபாப்,மார்ஸ்மால்லோ,ஆண்ட்ராய்டு  நுகட் ,ஆண்ட்ராய்டு ஓரியோ, ஆண்ட்ராய்டு பை கடைசியாக 2019 -ல் ஆண்ட்ராய்டு 10 பதிப்பை வெளியிட்டு இருந்தது இதற்க்கு ஆண்ட்ராய்டு -Q  என்று பெயரிடப்பட்டது .

    ஆண்ட்ராய்டு அதீத வளர்ச்சியை பார்க்கும் போது வரும் காலங்களில் மாபெரும்  மாற்றம் அடையும் என்ற நம்பிக்கையை நம் ஆள் மனதில் புகுத்துகிறது. இந்த வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் இதில் சில வழிகேட்டிற்கு  செல்ல கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றது , ஆகவே நாம் வழிகேட்டிற்கு செல்ல கூடியதை தவிர்த்து விட்டு வளர்ச்சி பாதையை நோக்கி செல்வோம் .